ஹேப்பி நியூஸ்...சென்னையில் மிதமான மழை தொடருமாம்.. வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு!
Recommended Video

சென்னை: சென்னையில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் தொடங்கும் மழை விடிய விடிய தொடருகிறது.
இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதமான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் மழை நீடிக்கும்
இந்நிலையில் ஆந்திரத்தையொட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மிதமான மழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வடதமிழகத்தில் மழை
மேலும் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

பலத்த காற்று வீசும்
மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் இன்று மாலை முதல் 45 முதல் 55 கிமீ வேகத்தில் கடற்பகுதியில் காற்று வீசும் என்றும் நாளை முதல் 65 முதல் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்
இதன் காரணமாக மீனவர்கள் அந்தமான், தெற்கு மற்றும் மத்திய வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக காஞ்சிபுரத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் செம்பரம்பாக்கம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
{document1}












Click it and Unblock the Notifications