சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யுமாம்!... தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!
சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக காலையில் ஜில்லென்ற வானிலை நிலவி வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இது வெப்பசலனத்தால் ஏற்படும் மழை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் யாரும் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் இன்றும் நாளையும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுவரை காலையில் குளிர்ந்த வானிலை நிலவும்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications