கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு: ரமணன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் புதியதாக புயல் ஏதும் உருவாக வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழையின் திவிரத்தால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன.

Rains Likely to Continue in Tamil Nadu for Next Few Days: Met office

வெள்ளம் வடிந்து இயல்பு நிலையில் திரும்பிய நிலையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் தெரிவித்த ரமணன், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவித்தார்.

லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். வங்கக் கடலில் புதியதாக புயல் ஏதும் உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறிய ரமணன், வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இருந்து மழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+