For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை.. கொண்டாடும் மக்கள்!

சென்னையின் பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையின் பல பகுதிகளில் மழை-வீடியோ

    சென்னை: நகரின் பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.

    சென்னையில் காலை முதலே மேகமூட்டமாக இருந்துவந்தது. இருப்பினும் அவ்வப்போது திடீர் திடீரென தலைக்காண்பித்த சூரியனும் சுட்டெரித்தது.

    இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென மேகம் திரண்டு சென்னையை சூழ்ந்தது. திடீரென கருமேகம் சூழ்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மக்கள் ஏமாற்றம்

    மக்கள் ஏமாற்றம்

    ஆனாலும் கடந்த ஒரு வாரமாகவே மேமூட்டம் நிலவி வந்த நிலையில் சொல்லிக்கொள்ளும்படி மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

    பலத்த இடியுடன் மழை

    பலத்த இடியுடன் மழை

    இந்நிலையில் இன்று திரண்ட கருமேகங்கள் அப்படியே மழையை பொழிய தொடங்கியுள்ளது. சென்னை போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் நல்ல மழை பெய்து வருகிறது.

    பலத்த மழை

    பலத்த மழை

    கே.கே.நகர். விருகம்பாக்கம், அசோக்நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. முகப்பேர், நெற்குன்றம், அண்ணாநகர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    புறநகரிலும் மழை

    புறநகரிலும் மழை

    சென்னையின் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம் பொன்னேரி, கவரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இடியுடன் பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    English summary
    Rains in many places of Chennai. Chennai Porur Valasarawakkam gets thunder rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X