நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை- ஆளுநர் மாளிகை விளக்கம்
Recommended Video

சென்னை: பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி, ஆளுநரை தொடர்புபடுத்தி நக்கீரன் நாளிதழில் அண்மையில் ஒரு செய்தி வெளியானது. இந்த கட்டுரைக்காக நக்கீரன் கோபால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அந்த கட்டுரையில் நிர்மலா தேவிக்கு துணைவேந்தர் பதவி கிடைப்பதற்காக அவர் தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிகளை பலிக்கடாவாக்கிவிட்டார்.
[ நிர்மலா தேவி கட்டுரைக்காக புகார் ஏன்.. முதல் முறையாக மவுனம் கலைத்த ஆளுநர் மாளிகை.. பரபர அறிக்கை ]

தகவல்கள்
இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் அவரது செயலாளருக்கும் தொடர்பிருக்கிறது. உண்மையான குற்றவாளிகள் பிடிப்படாமல் இருக்கவே நிர்மலா தேவிக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாகவும் அந்த செய்தியில் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆளுநர் மாளிகை
இதனால் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இத்தனை நாட்களாக மவுனமாக இருந்த ஆளுநர் தரப்பு இன்று தங்கள் மவுனத்தை கலைத்தது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

சட்ட நடவடிக்கை
அதில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்புப்படுத்துவது உண்மைக்கு புறம்பானது. போலீஸில் நிர்மலா கொடுத்த வாக்குமூலமே ஆளுநருக்கு தொடர்பில்லை என்பதை காட்டுகிறது. மிகுந்த பொறுமைக்கு பிறகே ஆளுநர் மீதான அவதூறுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுரை
நிர்மலா தேவி விவகாரம் வெளியாகி 6 மாதங்களாக ஆளுநர் மாளிகை பொறுமை காத்தது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக புலன் விசாரணை முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விசாரணைகள் முடிந்த நிலையில் நக்கீரன் இதழில் அவதூறு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

அச்சுறுத்தல்கள்
நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழக ஆளுநரை தொடர்புபடுத்தி வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்லை. கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகை வந்ததே கிடையாது. நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாது.

ஆளுநர் மாளிகை கடிதம்
ஆளுநரையோ, செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா சந்திக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் ஆளுநர் தங்கவில்லை. அந்த பயணத்தின்போது செயலாளர் உடன் வரவில்லை என்று ஆளுநர் மாளிகை கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளது.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications