ரஜினியின் ரூ. 1 கோடி எப்பவோ ரெடி... நதி நீர் இணைப்பு தொடங்கியதும் தருவார்.. அண்ணன் சத்யநாராயணா
தஞ்சை: நதி நீர் இணைப்புக்காக தான் கொடுப்பதாகச் சொன்ன ரூ 1 கோடி நிதியை, ரஜினிகாந்த் அப்போதே வங்கியில் டெபாசிட் செய்துவிட்டார் ரஜினி என்றும், அந்தப் பணம் அரசு திட்டத்தை அறிவித்த உடன் போய்ச் சேர்ந்துவிடும் என்றும் ரஜினி அண்ணன் சத்யநாராயணா ராவ் கூறினார்.
கடந்த 2002-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கோரி ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்த உண்ணாவிரதத்தின் முடிவில் ஆளுநரிடம் காவிரி நதி நீர் மற்றும் நதிகள் இணைப்பு குறித்து மனு கொடுத்த ரஜினி, நதிகள் இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்தால் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ 1 கோடி தருவதாக வாக்களித்தார்.
அதன் பிறகு 14 ஆண்டுகள் கடந்தும், இன்னும் நதி நீர் இணைப்பு குறித்து பாஜக அரசோ, காங்கிரஸ் அரசோ எதுவும் பேசவில்லை. எந்தத் திட்டமும் போடவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நதிகளை இணைப்பது இயற்கைக்கு விரோதமானது. எனவே அது சாத்தியமில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டார்.
இந்த நிலையில் திடீரென விவசாயிகள் என்ற பெயரில் சிலர் ரஜினி கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாயை உடனே கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என மிரட்ட ஆரம்பித்தனர்.
இவர்கள் உண்மையில் விவசாயிகள்தானா அல்லது பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார்களா என பலரும் பேச ஆரம்பித்த நிலையில், இதற்கு ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஒரு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
இன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்த அவர் கூறுகையில், "ரஜினி அமெரிக்காவில் நலமுடன் இருக்கிறார். கபாலி ரிலீசின்போது திரும்பி விடுவார்.
நதி நீர் இணைப்புக்காக ரஜினி தருவதாகச் சொன்ன அந்த ஒரு கோடியை அப்போதே தேசிய வங்கியில் டெபாசிட் செய்து விட்டார். மத்திய அரசு நதிகள் இணைப்பை அறிவித்த உடனை அந்தத் தொகை முழுவதும் அப்படியே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி," என்றார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications