எனது இலங்கை பயணத்தை அரசியலாக்கி விட்டார்களே.. ரஜினி வேதனை
சென்னை: தனது இலங்கைப் பயணம் அரசியலாக்கப்பட்டதால், ரத்து செய்துவிட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
வடக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலவச வீடுகளை தனது ஞானம் அறக்கட்டளை மூலம் கட்டித் தருகிறது லைகா நிறுவனம்.

அந்த வகையில் 150 வீடுகளை வட இலங்கையில் கட்டி முடித்துள்ளது. இந்த வீடுகளை தமிழர்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9, 10 தேதிகளில் யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குவார் என லைகா நிறுவனம், ரஜினியின் ஒப்புதலோடு அறிவித்தது.
இதுகுறித்த அறிவிப்பு வந்ததுமே, இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் நடத்தும் சிலர் எதிர்க்க ஆரம்பித்தனர்.
திருமாவளவன், வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களும் ரஜினி தன் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி இன்று அறிவித்தார்.
ரஜினிகாந்த் அறிக்கை:












Click it and Unblock the Notifications