ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு: சுப.உதயகுமார், நாஞ்சில் சம்பத்தை தாக்க ரசிகர்கள் முயற்சித்ததால் பரபரப்பு!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்த்த சுப. உதயகுமார், நாஞ்சில் சம்பத்தை ரசிகர்கள் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்த்த அதிமுகவின் நாஞ்சில் சம்பத், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் சுப. உதயகுமார் ஆகியோரை ரசிகர்கள் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினிகாந்த் தாம் அரசியலுக்கு வரப் போவதாக அண்மையில் ரசிகர்களிடையே பேசும்போது கோடிட்டுக் காட்டினார். அத்துடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
தற்போது டிவி சேனல்களிலும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகின்றன. தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியிலும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தாக்க முயற்சி
இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் சுப. உதயகுமார், அதிமுகவின் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ரஜினிகாந்தை விமர்சித்தனர். இந்த விமர்சனங்களால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் இருவரையும் தாக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நடந்தது என்ன?
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சுப. உதயகுமார் பதிவிட்டுள்ளதாவது: நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது என்று வாதிட்டேன். ரஜினி ரசிகர்கள் சிலரும், ஆர்யத்துவக் கூட்டத்தினர் பலரும் அடிப்பதற்கு மேடையை நோக்கிப் பாய்ந்தனர்.

அதிர்ச்சி
மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்தனர். கூச்சலிட்டு பேச விடாமல் தடுத்தனர். இவர்கள் அரசியலுக்கு வந்தால், தமிழகம் என்னவாகும் என்பதை நடுநிலையாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவலம் உறுதி
திரு. பாண்டே வருத்தம் தெரிவித்தார். திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போதும் மிக அநாகரிகமாக நடந்துகொண்டது இந்த பா.ஜ.க. B-டீம். ரஜினியின் ஆண்டவன் ஒரு வழியாகப் பேசி, இவர் அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு பெரும் அவலத்தை சந்திக்கும் என்பது உறுதி.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications