For Daily Alerts
Just In
நடிகர் ரஜினிகாந்த் வெள்ள நிவாரண நிதியாக ரூ10 லட்சம் வழங்கினார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சத்தை வழங்கி இருக்கிறார்.
தமிழகத்தை கடந்த சில வாரங்களாக மழை கடுமையாகப் பாதித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சங்கத்தின் மூலமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், பிரபு, விக்ரம் பிரபு, சத்யராஜ், சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் ஆகியோர் தங்களால் இயன்ற தொகையை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் நடிகர் ரஜினிகாந்த் தனது பங்காக ரூ 10 லட்சத்தை தமிழக மக்களின் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார்.
நடிகர் சங்கத்தின் மூலமாகத் திரட்டப்படும் இந்த நிதியானது விரைவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.
Here is the letter announcing TN Flood relief donation by @superstarrajini pic.twitter.com/HtKJww3AdY
— Madhan Drifter (@madhandrifter) December 1, 2015
Comments
English summary
Today Actor Rajini Kanth has donated 10 Lakhs for Tamil Nadu Chief Ministers relief fund through Nadigar Sangam.