அரசியல் அறிவிப்புக்கு பிறகு ரஜினி கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி: எம்ஜிஆர் சிலையை திறந்தார்
அரசியல் அறிவிப்புக்கு பிறகு ரஜினி, எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினிகாந்த்- வீடியோ
சென்னை: அரசியலுக்கு வருவதாக அறவித்த பின்னர் ரஜினிகாந்த் இன்று எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைப்பதற்காக முதல்முறையாக விழாவில் கலந்து கொண்டார்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இன்று வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர்கள் பிரபு, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு முதல் முறையாக கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி இதுவாகும். இதனா மூலம் எம்ஜிஆர் அபிமானிகளின் வாக்குகளை கவர ரஜினி வியூகமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications