கொச்சையான விமர்சனங்களால் ரஜினியையும் ரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது!- திருமாவளவன்
கொச்சையான விமர்சனங்களால் கபாலி ரஜினியையும் ரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது. படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
அண்மையில் விகடனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கபாலி குறித்த தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
அதில், "கபாலி' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல் பற்றிய கதைதான் படம். இதில் எங்கேயுமே சாதி முன்நிறுத்தப்படவில்லை; தமிழர் அடையாளம், கொத்தடிமைக் கலாசாரம்தான் முன்நிறுத்தப்படுகின்றன.

ஆனால், பா.இரஞ்சித் தலித் சமூகத்தைச் சார்ந்த இயக்குநர் என்ற காரணத்தினாலேயே, அவர் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.
ரஜினிகாந்துக்குத் தெரியாமல் இரஞ்சித்தால் ஒரு வசனம் கூட படத்தில் பேசவைத்திருக்க முடியாது. சாதி என்ற எல்லைகளைக் கடந்து, சினிமா என்ற அடிப்படையில்தான் படத்தைப் பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கொச்சையான விமர்சனங்களால் ரஜினிகாந்தையும் இரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது. படம் பார்த்து முடித்ததுமே இரஞ்சித்தை அழைத்து வாழ்த்தினேன். மகிழ்ச்சி,'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications