கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர் மூவரையும் புகழ்ந்த ரஜினி.. மாஸ் பேச்சு!
சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார்.
Recommended Video

சென்னை: சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர் மூவரையும் புகழ்ந்து ரஜினி பேசி இருக்கிறார்.
வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் '' கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் கருணாநிதி'' என்றார்.
மேலும் '' 13 ஆண்டுகள் மிகுந்த திறமைசாலியானகருணாநிதியை ஆட்சிக்கே வரவிடாமல் தடுத்தவர் எம்ஜிஆர்.நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் எம்ஜிஆர்தான். எம்ஜிஆரை பார்த்தபோது சூரியன் போன்றவருக்கு யார் சந்திரன் என்று பெயர் வைத்தார்கள் என்று யோசித்தேன். '' என்றார்.
மேலும் '' இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா. அவரை போல கட்சியை யாருமே நடத்தவில்லை. '' என்றார்.












Click it and Unblock the Notifications