அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி ரஜினி.. ஜெயக்குமார் தாக்கு
Recommended Video

சென்னை: அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி ரஜினி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.

மேலாண்மை வாரியம் அமைக்க கொடுக்கப்பட்ட 6 வார கால அவ காசம் இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறினார்.காவிரி விவகாரத்தில் யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் பாஜக அரசுடன் ஆதரவும் இல்லை கூட்டணியும் இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் ஆனால் உள்ளாட்சி அமைப்பு எல்லை வரையறைப் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு சேவை செய்ய தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மீக ஞானி ரஜினி என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications