எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும்- ரஜினி ஆவேசம்
எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று ரஜினி ஆவேசமாக தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: மக்கள் எல்லாவற்றிற்கும் போராடி கொண்டே இருந்தால் தமிழகமே சுடுகாடாவிடும் என்று ரஜினி ஆவேசமாக தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினி. இதையடுத்து அவர் மாலை சென்னை திரும்பினார்.

சமூக விரோதிகள்
அப்போது சென்னை விமான நிலையத்தில் ரஜினி பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததில்தான் போராட்டம் வன்முறையாக மாறியது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்த போல் தூத்துக்குடி போராட்டத்திலும் புகுந்துவிட்டனர்.

மீனவ மக்கள்
மேலும் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியது எல்லாம் அப்பாவி மக்கள் மற்றும் மீனவ மக்கள், ஆனால் சமூக விரோதிகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரை அடித்தனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தினர், குடியிருப்புகளை எரித்ததும் அவர்கள்தான் என்று தெரிவித்தார்.

காவல் துறையினர்
சமூக விரோதிகள் தான் போராட்டத்தில் புகுந்தனர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த ரஜினி அது எப்படி தெரியும் என்றால் எனக்கு தெரியும் அவ்வளவுதான் என ஆவேசமாக கூறினார். இந்த பிரச்சனையின் ஆரம்பமே அந்த சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்தனர் அதுதான்.

சுடுகாடாகிவிடும்
காவல்துறையினர் தங்கள் உடையில் இருக்கும்போது அவர்களை அடித்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் ஓகே என ஆவேசமாக கூறினார். மக்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் தேங்க்யூ என்று கூறிவிட்டு விர்ரென புறப்பட்டார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications