For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூக விரோதிகளை உங்களுக்கு தெரியும்னா... பலியான 13 பேரும் எந்த இயக்கம்னு சொல்லுங்க சார்?

சமூகவிரோதிகளை தனக்கு தெரியும் என்று கூறும் ரஜினி காந்த் அப்படியே பலியான 13 பேரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தெளிவுப்படுத்தலாமே.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய ரஜினி!-வீடியோ

    சென்னை: தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்தவர்கள் சமூக விரோதிகள்தான் எனக்கு தெரியும் என்று கூறும் ரஜினிகாந்த் , போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் சொல்லிவிடலாமே.

    தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களையும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி சென்றார் ரஜினிகாந்த்.

    அப்போது ஒரு இளைஞர் யார் நீங்க என்று கேட்டு ரஜினியை அவமதித்துவிட்டார். போராடும் போது வரவில்லை, இப்போது ஏன் வந்தீர்கள் என்றும் கேட்டுள்ளார்.

    ஆவேசம் அடைந்த ரஜினி

    ஆவேசம் அடைந்த ரஜினி

    இதனால் ரஜினி சிரித்தவாறே அந்த இளைஞருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினி பேசுகையில் போலீஸாரை தாக்கியதும், ஆட்சியரகத்தை கொளுத்தியதும் சமூகவிரோதிகள்தான் என்றார்.

    ரஜினி பதில்

    ரஜினி பதில்

    அதற்கு செய்தியாளர்கள் சமூகவிரோதிகள்தான் என்று எப்படி தெரியும் என்ற கேள்விக்கு எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார் ரஜினி. திரும்பத் திரும்ப சமூகவிரோதிகள் என்று கூறும் ரஜினி எனக்குத் தெரியும் என்றும் கூறுகிறார். அதேபோல பலியான 13 பேரும் யார் என்பதையும் ரஜினியே விளக்க வேண்டும். அவர்கள் எந்த தீவரமாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் ரஜினியே பிரஸ்மீட் வைத்து தெளிவுபடுத்தலாம்.

    ரஜினியிடம் துப்பு

    ரஜினியிடம் துப்பு

    மேலும் காவல்துறை ரஜினியிடம் அந்த சமூக விரோதிகள் யார் என்ற விவரத்தை அறிய முயற்சிக்கலாம். காரணம், ரஜினியிடம் மிகப் பெரிய துப்பு இருப்பது போல தெரிகிறது. அதை போலீஸார் விசாரித்து உண்மையை அறிய முயற்சிக்கலாம்.

    காவல் துறை

    காவல் துறை

    அதேபோல ரஜினி தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் சென்று தனக்குத் தெரிந்த பட்டியலை கொடுத்து போலீஸாரையும், ஆட்சியரகத்தையும் தாக்கியவர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். அதை விட்டு விட்டு வாய் வலிக்க கோபம் காட்டி பிரயோஜனமும் இல்லை.

    English summary
    Rajinikanth knows the anti social elements means he has to clarify who are the 13 died in firing? To which anti social group they belongs to?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X