போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்... விசிலடித்து வரவேற்ற ரஜினி ரசிகர்கள்
போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று ரஜினி கடந்த மே மாதம் தெரிவித்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சென்னை: போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று ரஜினி பேசிய வார்த்தை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது தமிழகம் முழுவதும் ஹாட்டாப்பிக்காக இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் அவரோ பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். மேலும் 1996-இல் கிடைத்த பொன்னான வாய்ப்பையும் ரஜினி நழுவ விட்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த ஆண்டில் ரஜினியின் அரசியல் பேச்சும் அதனால் ஏற்பட்ட தாக்கமும் குறித்து பார்ப்போம்.

ரஜினி ரசிகர்களை சந்திப்பு
கடந்த மே மாதம் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை 8 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் நடிகனாக வேண்டும் என்று ஆண்டவன் நினைத்தான். அதன்படியே ஆனது. நாளை நான் என்னவாவேன் என்று அவன் நினைப்பானோ அதன்படி நடப்பேன்.

சிஸ்டம் சரியில்லை
அரசியலில் இறங்க எனக்கு பயம் என்கிறார்கள். ஒரு ஆற்றுக்குள் இறங்கும்போது முதலை இருந்தால் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்று கூறுவது புத்திசாலித்தனமா, இதுதான் தைரியமா. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை.

நல்லது செய்ய...
சிஸ்டத்தை சரி செய்ய மு.க. ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி உள்ளிட்டோர் இருக்கின்றனர். தமிழக மக்கள்தான் என்னை வாழ வைத்தனர். இன்று நான் கார் , பங்களா என வசதியோடு இருக்க காரணமும் அவர்கள்தான். அந்த தெய்வங்களுக்கு நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனக்கும் உங்களுக்கும் தொழில்
எனக்கும் படத்தில் நடிக்கும் தொழில் உள்ளது. உங்களுக்கும் உங்கள் தொழில், குடும்பம் என உள்ளது. எனவே தற்போது சென்றுவிட்டு போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார். ரஜினி அரசியலுக்கு வர விரும்புவதாக அவரது நண்பர் ராஜ்பகதூர் உறுதிப்படுத்தினார்.

தமிழருவிமணியன்
திருச்சியில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்ட மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான காரணங்களை எடுத்துரைத்தார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று உறுதிப்பட தெரிவித்தார். இந்த சம்பவங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications