தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் இருக்குங்க... சொல்வது ரஜினி!
தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை: தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
காமராஜரின் 116-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காமராஜர் போன்ற ஒரு தலைவர் மீண்டும் உருவாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கல்வி சிறப்பாகவே இருக்கிறது. அதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்திய கொள்கையில் வாழ்ந்து கொண்டிருப்பர் தமிழருவி மணியன் என்பது அனைவருக்கும் தெரியும்.

மனமார்ந்த நன்றி
காமராஜரின் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் தமிழருவி மணியன் என்னுடன் இணைந்தால் எனக்கு சந்தோஷம்தான். அவருக்கு எனது மனமார்ந்த் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உழைக்க வேண்டும்
நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதற்கான சாத்தியம் இல்லை என்பது எதுவும் கிடையாது. நல்ல எண்ணம் இருக்க வேண்டும். எந்த வித சுயநலமும் இல்லாமல் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சில தியாகங்களை செய்து உழைக்க வேணடும்.

பார்க்கலாம்
இதை செய்தால் வெற்றி பெற முடியும். இரு தேர்தல்கள் நடத்தினால் நல்லதுதான். நேரம், பணம் இவையெல்லாம் மிச்சமாகும் என்பதால் அதுபோன்று நடத்தலாம். ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்து கொண்டே இருந்தால் தேர்தலுக்காக மக்களை சந்திப்பதிலேயே நேரம், காலம் எல்லாம் போய்விடும். ஒரே நேரத்தில் இரு தேர்தல்களை நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் கட்சி தொடங்குவது குறித்து பார்க்கலாம்.

அறிவிப்பேன்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நான் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து நான் அறிவிப்பேன்.

கூறமாட்டேன்
தமிழகத்தில் ஊழல் நிறைந்துள்ளது என்று அமித்ஷா கூறியிருக்கிறார் என்றால் அவரது பார்வைக்கு என்ன தகவல்கள் போய் சேர்ந்தன என்பது குறித்து எனக்கு தெரியாது. அதை பற்றி நான் எதையும் கூறவில்லை என்றார் ரஜினி.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications