பத்மவிபூஷன் விருதுக்காக மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி- ரஜினிகாந்த்
சென்னை: தமக்கு பத்மவிபூஷன் விருது வழங்கிய மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் வழங்கப்படும் என்று அன்மையில் மத்திய அரசு அறிவித்தது. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

ரஜினிகாந்துக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷனைத் தொடர்ந்து பத்மவிபூஷன் என அடுத்தடுத்து விருது வழங்கும் அளவுக்கு அப்படி என்ன சாதித்துவிட்டார்? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. மேலும் தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி ரசிகர்களின் வாக்குகளைக் கவருவதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கபாலி படத்தின் இறுதிகட்டப் படபிடிப்புக்காக இன்று ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு பத்மவிபூஷன் விருது வழங்கிய மத்திய அரசு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கூறினார். மேலும் கபாலி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் எந்திரனின் 2-வது பாகமான 2.0 படத்தில் நடிக்க உள்ளேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
Thalaivar exclusive on Polimer News...
Posted by Dhinesh Kumar S on Sunday, January 31, 2016












Click it and Unblock the Notifications