For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன் அந்த மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும்.. ரஜினி வேதனை

நீட் தேர்வில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை துரதிஷ்டவசமானது என்றும், அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 Rajinikanth tweeted condolence to Anitha family

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் நுழைவுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மருத்துவ இடம் கிடைக்காத சோகத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Recommended Video

    இறந்து போன நீட் போராளி அனிதா-வீடியோ

    இந்நிலையில் அனிதாவின் மரணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது : அனிதாவிற்கு நேர்ந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. தற்கொலை என்ற முடிவை எடுப்பதற்கு முன்னர் அவரின் மனம் எத்தனை வலியை கடந்திருக்கும் என்பதை என் மனது நினைக்கிறது. அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    English summary
    Actor Rajinikanth tweeted a condlence message for Anitha and her family, and also adds that what happens to Anitha is extremely unfortunate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X