சிறையில் ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிடும் முருகன்... ஜீவசமாதி பயணத்தை நோக்கி செல்கிறார்?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் நாள்தோறும் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்வதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதே போன்று நளினியும் தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோலில் விட வேண்டும் என்றும், சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதில் 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறேன். இதற்கு மேலும் சிறைவாழ்க்கையை தொடரவிரும்பவில்லை. அதனால் சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புகிறேன்.எனவே வருகிற 18ஆம் தேதி முதல் உணவு உண்ணாமல் பட்டினி கிடந்து சிறையிலேயே ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தோற்றத்திலும் சாமியார் போலவே காவி உடை, தலையில் நீண்ட முடி என்று காட்சியளிக்கிறார் முருகன். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முருகன் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் 18ஆம் தேதி ஜீவசமாதி அடைவதற்காக தற்போது சாப்பிட்டுவரும் ஒருவேளை உணவையும் தவிர்த்து பழங்களை மட்டுமே சாப்பிட இருப்பதாகவும் முருகன் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications