ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு வழங்க வேண்டும் என்பதே காங். கருத்து: நாராயணசாமி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப் பட்டு வேலூர் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜீவ் கொலை தொடர்பாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆனால், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விடுதலை உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெறப்பட்டது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியதாவது :-
தமிழக அரசு கொலைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்தலை கருத்தில் கொண்டு ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார். மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து' என இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications