பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்- தடா நீதிமன்றத்தில் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, வேலூர் சிறையில் உள்ளார் பேரறிவாளன். இவர், சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் (தடா) நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அன்றைய காலக் கட்டத்தில் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் எனக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த கொலை வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை. பலரை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.
மேலும், இந்த கொலை வழக்கில், பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன. ராஜீவ் கொலையின் சதித் திட்டத்தில் ஈடுபட்ட சில அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செயல்பாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை.
எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அந்த விசாரணையை இந்த கோர்ட்டு கண்காணிக்க வேண்டும்," என்று கோரிருந்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி (பொறுப்பு) முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவுக்கு சி.பி.ஐ.யின் கீழ் செயல்படும் பல்நோக்கு விசாரணை ஒழுங்குமுறை முகமை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "ராஜீவ் காந்தி 21-5-1991 அன்று மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, நளினி உட்பட 26 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கீழ் கோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் வழங்கிவிட்டது. மேலும், ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை தொடர்ந்து கண்காணிக்க சி.பி.ஐ.யின் கீழ் பல்நோக்கு விசாரணை ஒழுங்குமுறை முகமை 2-12-1998 அன்று அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கண்காணிக்கவும், வழக்கை விசாரிக்கவும் செய்து வருகிறது. எனவே பேரறிவாளன், மீண்டும் விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்ய எந்த உரிமையும் இல்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்," என்று கூறியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 11-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications