ஆர்வக்கோளாறு நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: கமல் குறித்து ராமதாஸ்

சிலரின் ஆர்வக்கோளாறு நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று கமல் குறித்து ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஒரு சிலரின் ஆர்வக்கோளாறு நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று பெங்களூருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை காவிரி பிரச்னை தொடர்பாக சந்தித்தார். அந்த சந்திப்பில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது.

 Ramadoss Condemns Kamal meeting with kumarasamy

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், காவிரி பிரச்னை குறித்து பேசி நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். கமலின் இந்தக் கருத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இதற்கும் ஜோரா கைத்தட்டுங்க! காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு... காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் கமலஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல இன்னொரு ட்விட் பதிவில், கர்நாடக முதலமைச்சரை கமலஹாசன் இன்று சந்தித்து காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்துகிறார்: செய்தி - காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+