தமிழகம் சுடுகாடாகுமா? ஸ்டெர்லைட் இருந்தா மண்ணோடு மண்ணாகிவிடுமே பரவாயில்லையா ரஜினி?- ராமதாஸ் சுளீர்
ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து இயங்கினால் தமிழகமே மண்ணோடு மண்ணாகி விடுமே பரவாயில்லையா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து இயங்கினால் தமிழகமே மண்ணோடு மண்ணாகி விடுமே பரவாயில்லையா என்று பாமக ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்,
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திப்பதற்காகவும் ரஜினி தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போராட்டம் மட்டுமே தீர்வாகாது. எல்லாவற்றிற்கும் போராடுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதுபோல் சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் போராட்டம் போராட்டம் என்று போராடிக் கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றார்.
போராட்டங்கள் நடந்தால் தமிழகம் சுடுகாடாகி விடும்: ரஜினிகாந்த் - ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து நடந்தால் தமிழகம் மண்ணோடு மண்ணாகி விடுமே பரவாயில்லையா?
— Dr S RAMADOSS (@drramadoss) May 31, 2018
ரஜினியின் கருத்து சமூக வலைதளங்களில் மிகவும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் போராட்டங்கள் நடந்தால் தமிழகம் சுடுகாடாகி விடும்: ரஜினிகாந்த் - ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் தொடர்ந்து நடந்தால் தமிழகம் மண்ணோடு மண்ணாகி விடுமே பரவாயில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications