ராமதாசை மெய்சிலிர்க்க வைத்த ஜெயலலிதா நடவடிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நட்ராஜ் மீண்டும் சேர்ப்பு என வெளியாகியுள்ள செய்திகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், ஜெயலலிதாவின் ஜனநாயகமும், புலனாய்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது என கேலி செய்துள்ளார்.

பாமக நிறுவனர் டிவிட்டர் மூலம் அரசின் நடவடிக்கைகள் குறித்து கொடுத்துள்ள கமெண்ட் சிலவற்றை பாருங்கள்:

பொதுப்பணித்துறை செயலருக்கு கூடுதலாக மின்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து கூறியுள்ள ராமதாஸ், அம்மாவின் ஆணைக்கிணங்க செம்பரம்பாக்கம் சீரழிவுக்கு வழிவகுத்ததற்கு பரிசு போலும்! என கூறியுள்ளார்.

திருடன் கையில் சாவி

திருடன் கையில் சாவி

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கையா நாயுடு கூறியது பற்றி ராமதாஸ் கூறுகையில், இதற்கு பெயர் தான் திருடன் கையில் சாவியை கொடுப்பதோ? என தெரிவித்துள்ளார்.

புல்லரிப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நட்ராஜ் மீண்டும் சேர்ப்பு என வெளியாகியுள்ள செய்திகுறித்து ராமதாஸ் கூறுகையில், ஜெயலலிதாவின் ஜனநாயகமும், புலனாய்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது என கேலி செய்துள்ளார்.

எல்லாம் கொடுத்தார்

எல்லாம் கொடுத்தார்

ஜெயலலிதா எனக்கு எல்லாம் கொடுத்தார் என்று ஆர்.நட்ராஜ் தெரிவித்ததை கேலி செய்துள்ள ராமதாஸ், முதலில் நீக்க உத்தரவும், பின்னர் சேர்ப்பு உத்தரவும் கொடுத்ததை சொல்கிறார் போலிருக்கிறது என்று விளாசியுள்ளார்.

உடன்குடி மின்நிலையம்

உடன்குடி மின்நிலையம்

உடன்குடி மின்நிலைய டெண்டர் பெற எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று வெளியாகியுள்ள தகவல் பற்றி, "தானாக முன்வந்து தலையை கொடுக்க யார் தான் தயாராக இருப்பார்கள்?" என கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+