தமிழக அரசின் நிர்வாகத் திறமை இன்மையை அம்பலப்படுத்திய பட்ஜெட்: ராமதாஸ் சாடல்
சென்னை: தமிழக அரசின் நிர்வாகத் திறமை இன்மையை அம்பலப்ப்படுத்துகிறது பட்ஜெட் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாச் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டசபையில் 2016-17 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். தமிழக அரசின் நிர்வாகத்திறன் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அவற்றை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளில் மது விற்பனை நேரம் குறைப்பு, மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைப்பு, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட 4 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டார். மக்களுக்கு பயனளிக்கும் மற்ற வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே பரிசாக கிடைத்திருக்கிறது.

கல்விக் கடன் தள்ளுபடி எங்கே?
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் பாரத ஸ்டேட் வங்கி அதன் கல்விக்கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் அளித்த நெருக்கடியால் மதுரையில் லெனின் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கல்விக்கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியிருந்த நிலையில், அதைச் செய்ய தவறிவிட்டதிலிருந்தே, மாணவர்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஸ்கூட்டர்கள், அத்திக்கடவு அவினாசி திட்டம் எங்கே?
அதேபோல், பணிக்கு செல்லும் மகளிருக்கு 50% மானியத்தில் இரு சக்கர ஊர்திகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்த அரசு, திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை.இதன்மூலம் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை அரசு மீண்டும் கிடப்பில் போட்டிருக்கிறது.

வேலைவாய்ப்புகள் இல்லை
மோசமான நிர்வாகம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயருவதற்கு வழிவகுத்து விட்டு, புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று கூறுவது ஏமாற்று வேலை ஆகும். தமிழ்நாட்டில் 83.35 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கோ, மக்களின் வறுமையை ஒழிப்பதற்கோ எந்த திட்டமும் அறிவிக்கப்பட வில்லை.

அரசு ஊழியர் ஓய்வூதிய திட்ட விவகாரம்
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து ஆராய உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அப்பரிந்துரைகள் எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டு இருந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

விலைபோனதா ஆளும் கட்சி?
அதிமுக ஆட்சிக்கு வந்தால் கிரானைட் மற்றும் தாதுமணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை அரசே விற்பனை செய்யும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்புகள் இல்லை என்பதால் இயற்கைவளக் கொள்ளையர்களிடம் ஆளுங்கட்சி விலைபோய் விட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

லோக் அயுக்தா மசோதா
ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அதற்கான மசோதாவை நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும்.

குறைவான வரிவருவாய்
தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் எந்த ஒரு துறையிலும் வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட முடியவில்லை. கடந்த ஆண்டில் ரூ.96,083 கோடி வரி வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ரூ.86,537 கோடி மட்டுமே ஈட்டப்பட்டிருக்கிறது. வணிக வரி ரூ.72,068 ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அதைவிட சுமார் ரூ.5,000 கோடியும், மோட்டார் வாகன வரி வருவாய் ரூ.4882 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் அதைவிட ரூ.497 கோடியும் குறைவாகவே ஈட்டப்பட்டிருக்கிறது. வரி இல்லாத வருவாயும் பெருமளவில் குறைந்திருக்கிறது. தமிழக அரசின் நிர்வாகத்திறமையின்மையையே இது வெளிப்படுத்துகிறது.

வளர்ச்சியே இருக்காது
2016-17 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.40,533 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. இதை சமாளிக்க நடப்பாண்டில் மட்டும் ரூ.41,085 கோடி அளவுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். இதனால் நடப்பாண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ.2,52,431 கோடியாக இருக்கும். இதற்கான வட்டியாக ரூ.21,215 கோடி செலுத்த வேண்டியிருக்கும். இவை எதுவுமே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பான ரூ. 1.64 லட்சம் கோடியில் ஊதியம், ஓய்வூதியம், மானியம், கடனுக்கான வட்டி ஆகியவற்றுக்காக செலவு செய்யப்படும் தொகை மட்டும் ரூ. 1,54,536 கோடி ஆகும். அதாவது மொத்த வருவாயில் 96 விழுக்காட்டை ஊதியம், மானியம், கடன் வட்டி ஆகியவற்றுக்கே செலவிட்டால் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட நிதியே இருக்காது; அதனால் வளர்ச்சியும் இருக்காது.

கடனிலும் முதலிடம்
ஏற்கனவே, நிதிப்பற்றாக்குறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், விரைவில் கடனிலும் தமிழகம் முதலிடம் பிடிக்கும். அவ்வகையில் தமிழகத்தை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளியது மட்டுமே ஜெயலலிதா அரசின் சாதனையாக இருக்கும்.
இவ்வாறு ராமதாஸ் சாடியுள்ளார்.
-
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்!












Click it and Unblock the Notifications