ராமதாஸ்- அன்புமணிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Ramadoss, son to get security: HC
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அவர்களது சுற்றுப்பயணங்களின் போது செய்து தர மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய சாதி ரீதியிலான மோதல்களால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது தென்மாவட்ட சுற்றுப் பயணங்கஷின் போது பாதுகாப்பு தேவை என மனு செய்திருந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ‘பொதுவாக அரசியல் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வோருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் முக்கிய கடமையாகும். எனவே சுற்றுப்பயண விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப் படும் பட்சத்தில் பொதுக்கூட்டங்களில் அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் இந்தத் தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

முன்னதாக அன்புமணி தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த ஏப்ரல் 26ம் தேதியோடு தங்களுக்கான போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு விட்டது. சமீபத்திய சாதி ரீதியிலான பிரச்சினைகளால் எங்களது உயிருக்கு ஆபத்து அதிகமாகியுள்ளது. மிரட்டல்களும் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எங்களுக்கு பாதுகாப்பு அவசியம் என தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+