இந்தி இல்லாமல் வேலைவாய்ப்பு இல்லையா? பானிப்பூரி விக்கறவங்களும் அப்படிதான் சொல்றாங்க-ராமதாஸ் பொளேர்
இந்தி மொழி இல்லாமல் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் வெங்கையாவின் கருத்துக்கு பாமக நிறுவனர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: இந்தி மொழி, தமிழக மீனவர் விவகாரம், ம.பி. அமைச்சரின் பதவி பறிப்பு ஆகிய விவகாரங்களில் பாமக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இந்தி மொழி குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில் இந்தி தேசிய மொழியாகும். இந்திதான் நமது தாய்மொழி. அதுதான் நமது அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும்.
நாம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது, நம்மை ஆங்கிலேய மனப்பான்மை கொண்ட மக்கள் போல நினைத்துக்கொள்கிறோம். இது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல. இந்தி நமது தேசிய மொழி. அது இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை. வேலைவாய்ப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று தங்களை வளைத்துக் கொள்வது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

தொடர் சர்ச்சை
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும், எழுதும்போதும் பேசும்போதும் இந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஏப்ரல் மாதம் செய்திருந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்து கருத்து கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
|
மீண்டும் சர்ச்சை
இந்நிலையில் இந்தி மொழிதான் இந்தியாவின் தாய்மொழி என்று அவர் மீண்டும் கூறியிருப்பது குறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இந்தி தேசிய மொழி. அது இல்லாமல் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை: வெங்கையா நாயுடு- ஆமாம்... பானிபூரி விக்கிறவங்களும் அப்படித்தான் சொல்றாங்க! என்று குறிப்பிட்டுள்ளார்.
|
தமிழக மீனவர்கள்
தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ராமதாஸ் குறிப்பிடுகையில், 18 தமிழக மீனவர்கள் சிங்களப்படையால் கைது: செய்தி - ஆஹா... அடிமை முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுத மேலும் ஓர் அரிய வாய்ப்பு! என்றார்.
|
தமிழகத்திலும் நிறைய...
தேர்தல் செலவு கணக்கில் தவறான செய்தி தகவல் தெரிவித்ததாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது. இதனால் அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இதுகுறித்து ராமதாஸ் கூறுகையில், தேர்தல்செலவை மறைத்த மத்திய பிரதேசஅமைச்சரின் பதவிப் பறிப்பு- 3 ஆண்டு போட்டியிடத் தடை: தமிழகத்தில் இப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்கள் பலர்! என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications