நேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் நிவாரணப் பொருள்... அனுப்பியது சென்னை ராமகிருஷ்ணா மிஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது சென்னை ராமகிருஷ்ணா மிஷன் கிளை.

நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.

/news/tamilnadu/ramakrishna-missions-chennai-wing-sends-relief-quake-hit-nepal-226752.html

இந்த நிலநடுக்க பாதிப்பிலிருந்தே மக்கள் முழுவதும் மீளாத நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 80 பேர் உயிரிழந்தனர், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேபாளத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமகிருஷ்ணா மிஷனின் சென்னைக் கிளை ரூ. 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது. 23 டன் மதிப்புள்ள இந்த நிவாரணப் பொருட்கள் பீகார் செல்லும் ரயிலில் அனுப்பப் பட்டுள்ளது. உடன் ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+