திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள் வாங்கியது கடல்-மீனவ கிராம மக்கள் அச்சம்
கடல் ஒருகிலோ மீட்டருக்கு மேல் உள்வாங்கி இருப்பதால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
ராமநாதபுரம்: திருப்பாலைகுடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி இருப்பதால் மீனவ மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எச்சரிக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் கடலுக்கள் யாரும் செல்ல வேண்டாம், கடலில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் கடந்த இரு தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடலலையோ 10 முதல் 15 அடி உயரம் மேலெழுந்து வருகிறது. 18 மீனவ கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி காணப்படுகிறது. இதனால் கடல்நீர் எந்நேரமும் ஊருக்குள் நுழைந்துவிடுமோ என்ற கவலையில் மீனவ மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே, அறிவுறுத்தலையும் மீறி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குளிக்க முயன்றவர்களை ஒலிபெருக்க வாயிலாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் எச்சரித்தனர். எச்சரிக்கையையும் மீறி நீராடியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications