திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள் வாங்கியது கடல்-மீனவ கிராம மக்கள் அச்சம்
கடல் ஒருகிலோ மீட்டருக்கு மேல் உள்வாங்கி இருப்பதால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
ராமநாதபுரம்: திருப்பாலைகுடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி இருப்பதால் மீனவ மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எச்சரிக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் கடலுக்கள் யாரும் செல்ல வேண்டாம், கடலில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் கடந்த இரு தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடலலையோ 10 முதல் 15 அடி உயரம் மேலெழுந்து வருகிறது. 18 மீனவ கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி காணப்படுகிறது. இதனால் கடல்நீர் எந்நேரமும் ஊருக்குள் நுழைந்துவிடுமோ என்ற கவலையில் மீனவ மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே, அறிவுறுத்தலையும் மீறி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குளிக்க முயன்றவர்களை ஒலிபெருக்க வாயிலாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் எச்சரித்தனர். எச்சரிக்கையையும் மீறி நீராடியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications