கியரை மாற்றிய தமிழக அரசு.. எதிர்பார்க்காத வேகம்! தென் மாவட்டத்தில் வரப்போகும்.. பிரம்மாண்ட ஏர்போர்ட்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான முன்கூட்டியே சாத்தியக்கூறு ஆய்வுகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இரு இடங்களை ஒரு குழு அண்மையில் ஆய்வு செய்தது. மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசு, உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் இங்கு விமான நிலையம் அமையும் என அறிவித்திருந்தது.
அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஜூலையில் ஐந்து சாத்தியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. ஆகஸ்ட் மாத வாக்கில், உச்சிப்புளி மற்றும் கீழக்கரை என இரண்டு இடங்களை அரசு தேர்வு செய்தது. அவற்றின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய ஏஏஐ-யை அரசு கோரியது. அதன்படி, அக்டோபர் இறுதியில் ஏஏஐ குழுவினர் இரு இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்தனர்.

ராமேஸ்வரத்தில் விமான நிலையம்
முதல் இடமான உச்சிப்புளி அருகே பெருங்குளம், கும்பாரம், வலந்தரவை கிராமங்கள் உள்ளன. இந்திய கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் பருந்துக்கு அருகே அமைந்துள்ளதால், "மாநில அரசு இதைத் தேர்வு செய்தால் கடற்படையின் ஒப்புதல் தேவை" என்று ஒரு வட்டாரம் கூறியது. ராமேஸ்வரம் கோயிலிலிருந்து (சுமார் 40 கி.மீ) ஒரு மணிநேரப் பயணத்திலும், ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து அரை மணிநேரத்திலும் இந்த இடத்தை அடையலாம்.
கீழக்கரை அருகேயுள்ள இரண்டாவது தளத்தின் அண்டை கிராமங்கள் மணிக்கநேரி, மாயாங்குளம். ராமேஸ்வரம் கோயிலிலிருந்து இங்கு செல்ல ஒன்றரை மணிநேரம் ஆகும். ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து அரை மணிநேரத்தில் இந்த இடத்தை அடையலாம்.
உச்சிப்புளி தளத்தில் ரயில் பாதை
"இரு இடங்களுமே தற்போது சாத்தியமானவை" என ஒரு வட்டாரம் குறிப்பிட்டது. ஆனால், இரண்டிலும் உயர் அழுத்த மின் கம்பிகள் உள்ளன. உச்சிப்புளி தளத்தில் ரயில் பாதையும் உள்ளது. "உச்சிப்புளியைத் தேர்வு செய்தால், மின் கம்பிகளையும், ரயில் பாதையையும் மாற்ற வேண்டியிருக்கும்" என்று மற்றொரு வட்டாரம் கூறியது. ஆரம்ப மதிப்பீட்டில், நிலப்பரப்பு சீராக உள்ளது எனத் தெரிகிறது.
ஏஏஐ தனது சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பித்த பிறகு, அரசு இறுதி முடிவெடுக்கும். திட்டத்திற்கு சுமார் 600 ஏக்கர் நிலம் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் தவிர, ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் (108 திவ்ய தேசங்களில் ஒன்று), மங்களநாத சுவாமி கோயில் (உத்திரகோசமங்கை), கோதண்டராமர் கோயில் போன்ற பல புகழ்பெற்ற கோயில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. ராமேஸ்வரத்திற்கு விமான இணைப்பு கிடைத்தால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.
இன்னொரு பக்கம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஓசூர் பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) விரிவான தொழில்நுட்ப-பொருளாதார அறிக்கை (DTER) தயாரிப்பதற்கான ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை (RFP) வெளியிட்டுள்ளது. இது இத்திட்டம் விரைவில் நனவாகவுள்ளதற்கான முதல் அறிகுறியாகும் இது.
மாநில அரசு இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விமான நிலையத்திற்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைச் சமர்ப்பித்த சில வாரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, விமான நிலையத்தை அமைப்பதில் மாநில அரசின் தீவிர நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஓசூர் பசுமைவெளி சர்வதேச விமான நிலையம்
டெண்டர் அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசகர் DTER, மாஸ்டர் பிளான், மற்றும் நிதி மாதிரியைத் தயாரிப்பார். மேலும், தடை வரம்பு மேற்பரப்பு (Obstacle Limitation Surface) ஆய்வுத் தரவுகளை மதிப்பாய்வு செய்தல், விமானப் போக்குவரத்து முன்னறிவிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீடுகள் ஆகிய பணிகளையும் மேற்கொள்வார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்காவிலுள்ள பெரிகை-பாகலூர் பகுதியில் சுமார் 2,200 முதல் 2,300 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைய உள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வில், பெலகொண்டப்பள்ளியில் உள்ள பழைய தனியார் விமான ஓடுதளத்தை விட இந்த இடம் மிகவும் பொருத்தமானது என்று கண்டறியப்பட்டது.
இந்த விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு ஒற்றை ஓடுதளம், இரட்டை இணையான டாக்ஸிவேகள் மற்றும் பெரிய விமானங்களை (Code 4E) கையாளும் வசதிகளுடன் CAT-III துல்லிய அணுகுமுறையையும் கொண்டிருக்கும். இதன் மூலம் குறைந்த தெரிவுநிலையிலும் விமானங்களை இயக்க முடியும், இது ஒரு உலகத் தரமான வசதியை உறுதி செய்கிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications