இலங்கையின் தொடர் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கைது செய்து வருவதைத் தொடர்ந்து அதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 131 தமிழக மீனவர்களை இலங்கைப் படை பிடித்துள்ளது. இதில் ஒரு பகுதியினரை மட்டுமே அது விடுவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையின் இந்த அட்டகாசத்தால், கடும் கோபமடைந்துள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள். ராஜபக்சே தனது சுயரூபத்தை மீண்டும் காட்டத் தொடங்கியுள்ளதாக கோபம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட 82 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுட்டுள்ளனர்.
மேலும் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 22 படகுகளை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications