மீண்டும், மீண்டும் மீனவர்களை விரட்டி அடிக்கும் இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடித்து மீண்டும், மீண்டும் இலங்கை கடற்படையினர் தங்கள் அட்டூழியத்தினை அதிகரித்து வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28 ஆம் தேதி முருகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்று மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 2 ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Rameshwaram fishermen threaten by Sri lankan navy

இந்தநிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500க்கும் அதிகமானவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை, 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு படகுகளுடன் கரைக்கு திரும்பினர். ஆனால் இதுகுறித்து மீனவர்கள் யாரும் மீன்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+