Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.. உண்ணாவிரதம், ரயில் மறியல்! தொடர் போராட்டம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம், ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

Rameswaram Fishermen Announce Indefinite Strike Train Blockade on August 19 Over Sri Lankan Arrests

எல்லை தாண்டி மேம்படுத்ததாக கூறிய ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. அதைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வப்போது மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 2,3 ஆண்டுகள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நடைபெற்றது.

அதில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் 13 ஆம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் கால வரலாற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+