மீளாத்துயரில் மீனவர்கள்.. ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படைக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் இன்று கைவிடப்பட்டதை அடுத்து ஒரு வாரம் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஒரு பக்கம் அண்டை மாநிலமான கர்நாடகாவால் காவிரி நதி நீர் முறையாக கிடைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் மறுபக்கம் அண்டை நாடான இலங்கை கடற்படை செய்து வரும் அட்டூழியங்களால் தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். பொருளாதாரத்தை பின் தங்கிய குட்டி நாடான இலங்கை மீனவர்கள் விசயத்தில் ஆட்டம் காட்டி வருகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் துயரம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

எல்லை தாண்டி தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிப்பதாக கூறி அவர்கள் சுட்டுக் கொல்வது, கொடூரமாக தாக்கி அவர்களின் படகுகளை சேதப்படுத்தி வலைகளை அறுத்து அட்டூழியம் செய்வது, கைது செய்து 6 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைப்பது என இலங்கை கடற்படையினர் தொடர் தொல்லைகளை கொடுத்து வருகிறார்கள். இதற்கு மத்திய மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைத்து பாதுகாப்பாக தாங்கள் மீன் பிடிக்க உதவ வேண்டும் என மீனவர்களும் மீனவர் சங்கங்களும் தொடர்ந்து பல முறை கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு முறை மீனவர் கைது சம்பவம் நடக்கும்போதும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு பல முறை இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். இலங்கை அரசிடம் மத்திய மாநில அரசுகள் தரப்பில் பல முறை தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பாக கோரிக்கை வைத்தும் அவர்கள் அதை மதிக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றவுடன் இலங்கை கடற்படை வேலையை தொடங்கியது. அன்றில் இருந்து எல்லா மாதமும் இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வந்ததை அடுத்து மீனவர்களை விடுவிப்பதாக தெரிவித்த இலங்கை அரசு, சில நாட்களிலேயே மேலும் சில தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிடும் நோக்கில் ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணமும் மேற்கொண்டனர். 24 ஆம் தேதி முதல் உண்ணாவிர போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று போராட்டத்தை கைவிட்டு ஒரு வாரம் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications