For Daily Alerts
Just In
ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில் என்ஜினில் தீ விபத்து !
காரைக்குடி: ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டுனர் உடனடியாக கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து இன்று மதியம் திருச்சியை நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் மாலை 6 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது: பின்னர் அங்கிருந்து புறப்படும் போது ரயில் என்ஜினில் லேசாக புகை வந்துள்ளது.
இதையறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது ரயில் என்ஜினில் இருந்து லேசாக தீப்பிடித்து புகை வெளியே வருவது தெரியவந்தது. இதனை அடுத்து ரயில் நிலைய ஊழியர்கள் தகவல் கொடுத்தார். ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
Rameswaram - Tiruchirapalli passenger train caught fire in karaikudi railway station
Story first published: Saturday, January 9, 2016, 2:43 [IST]