Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு.. தலைமை காஜி அறிவிப்பு

ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குவதாக தமிழக தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கலாம் என்று தமிழக தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜியார் சலாவுதீன் முகமது அயூப் கூறியதாவது:

ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. தமிழகத்தில் 26ம் தேதியன்று பிறை தென்படவில்லை. எனவே, 28ம் தேதியான நாளை நோன்பு தொடங்கும். அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை 27-ந் தேதி முதல் இன்று தொடங்கும்.

Ramjan fasting starts tomorrow

ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+