ராம்குமாருக்கு பாளை. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை... சுவாதியை கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம்
நெல்லை: சென்னையில் பொறியாளர் சுவாதியை படுகொலை வழக்கில் சிக்கி தற்கொலைக்கு முயன்ற கொலையாளி ராம்குமாருக்கு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சுவாதியை தாம் கொன்றதாக ராம்குமார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கடந்த ஒரு வார காலமாக கொலையாளி யார் என்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து நெல்லை மாவட்டம் பண்பொழில் கிராமத்தில் உள்ள ராம்குமார் வீட்டை நேற்று இரவு 10 மணியளவில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது திடீரென ராம்குமார் பிளேடால் 10 இடங்களில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து போலீசார் அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி முதலில் தென்காசி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சில மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் ராம்குமார் பேச தொடங்கினார். அப்போது போலீசாரிடம் சுவாதியை தாம் கொன்றதாக ராம்குமார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
சென்னையில் கைப்பற்றப்பட்ட கத்தியில் உள்ள கைரேகையும் ராம்குமாரின் கைரேகையும் ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, கத்தியில் இருந்த கைரேகைப் பதிவுடன் சென்னையில் இருந்து டி.எஸ்.பி. தேவராஜ் பாளையங்கோட்டை சென்றுள்ளார்.
இதனிடையே ராம்குமார் அனுமதிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications