சுவாதி கொலை வழக்கு... சிபிஐ விசாரணை கோரி இன்று வழக்கு தொடர முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர உள்ளதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

Ramkumar father to seek CBI probe on Swathi Murder Case

ஆனால் ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவன் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கக் கோரி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமையன்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்தவரும், ராம்குமாரின் வழக்கறிஞருமான ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் 17 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக் குழு புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்து வழக்கு தொடர்பான தகவல்களை கேட்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+