இந்தியாவிலேயே கரண்ட் கம்பியை "கடிச்சு" செத்த முதல் கைதி.. ராம்குமார்தான்!
சென்னை: இந்தியாவிலேயே எந்த சிறையிலும் இல்லாத புதுமையாக சென்னை புழல் சிறையில் ராம்குமாரின் மரணம் நடந்தேறியுள்ளது. கரண்ட் கம்பியை கடித்து இதுவரை எந்தக் கைதியும், எந்த சிறையிலும் இறந்ததில்லை. ஆனால் ராம்குமார் "மூலமாக" அந்த சாதனையைப் படைத்து விட்டனர் புழல் சிறை அதிகாரிகள்!
ராம்குமாரின் மரணத்திற்கு சிறை அதிகாரிகள் கூறியுள்ள காரணம் மிக மிக விசித்திரமாக இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா என்றே பலரும் சந்தேகமாக பேசி வருகிறார்கள். யாராலுமே இந்த மரணத்திற்கான காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகள் மட்டுமே இதை கூறி வருகின்றனர். மற்றவர்கள் இதை நம்பக் கூட மறுத்து வருகிறார்கள்.

இந்தியாவில் இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை அறிந்ததாக தகவல் இல்லை. கூகுளில் தேடிப் பார்த்தாலும் கூட நமக்கு எந்தத் தகவலும் இல்லை. இந்தியச் சிறைகளில் இதுவரை இப்படி ஒரு வித்தியாசமான மரணம் சம்பவித்ததில்லை. காரணம், இந்திய சிறைகளில் இப்படி கைதிகள், நிறுத்தி நிதானமாக கரண்ட கம்பியை தேடிப் பிடித்து வாயில் வைத்துக் கடித்து சுவைத்து செத்துப் போகும் அளவுக்கு கரண்ட் கம்பிகளோ, வயர்களோ வெளியில் தேமே என்று தொங்குவதாக தெரியவில்லை, அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை.
ஆனால் ராம்குமார் கரண்ட் கம்பியைப் பிடித்து கடித்து விட்டார், வயரைக் கடித்து விட்டார் என்று கூறுகிறார்கள். அதை அவர் எப்படிக் கடித்தார் என்பதையும் சிறை வார்டன் பேச்சிமுத்து என்பவர் உணர்ச்சிகரமாக நேற்று செய்தியாளர்களிடம் விளக்கவும் செய்தார். ஊரையே கூட்டி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்றுதான் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
சிறையில் கைதிகள் தற்கொலை என்பது ஆச்சரியமான விஷயம் அல்லதான். ஆனால் மரத்தில் தூக்குப் போடுவது, சிறை அறைக்குள் தூக்குப் போடுவது என மிக சாதாரண முறைகளுக்குத்தான் அதிக வாய்ப்புண்டு. ஆனால் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புழல் சிறையில் கரண்ட் கம்பியையும், வயரையும் எப்படி எடுத்து வாயில் கடித்து செத்துப் போகும் அளவுக்கு சர்வ சாதாரணமாக விட்டு வைத்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
இந்தியாவில் இதுவரை நடந்திராத மரணம் இது. அந்த வகையில் ராம்குமாரின் நூதன மரணம் வரலாறு படைத்து விட்டது!
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications