இந்தியாவிலேயே கரண்ட் கம்பியை "கடிச்சு" செத்த முதல் கைதி.. ராம்குமார்தான்!
சென்னை: இந்தியாவிலேயே எந்த சிறையிலும் இல்லாத புதுமையாக சென்னை புழல் சிறையில் ராம்குமாரின் மரணம் நடந்தேறியுள்ளது. கரண்ட் கம்பியை கடித்து இதுவரை எந்தக் கைதியும், எந்த சிறையிலும் இறந்ததில்லை. ஆனால் ராம்குமார் "மூலமாக" அந்த சாதனையைப் படைத்து விட்டனர் புழல் சிறை அதிகாரிகள்!
ராம்குமாரின் மரணத்திற்கு சிறை அதிகாரிகள் கூறியுள்ள காரணம் மிக மிக விசித்திரமாக இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா என்றே பலரும் சந்தேகமாக பேசி வருகிறார்கள். யாராலுமே இந்த மரணத்திற்கான காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகள் மட்டுமே இதை கூறி வருகின்றனர். மற்றவர்கள் இதை நம்பக் கூட மறுத்து வருகிறார்கள்.

இந்தியாவில் இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை அறிந்ததாக தகவல் இல்லை. கூகுளில் தேடிப் பார்த்தாலும் கூட நமக்கு எந்தத் தகவலும் இல்லை. இந்தியச் சிறைகளில் இதுவரை இப்படி ஒரு வித்தியாசமான மரணம் சம்பவித்ததில்லை. காரணம், இந்திய சிறைகளில் இப்படி கைதிகள், நிறுத்தி நிதானமாக கரண்ட கம்பியை தேடிப் பிடித்து வாயில் வைத்துக் கடித்து சுவைத்து செத்துப் போகும் அளவுக்கு கரண்ட் கம்பிகளோ, வயர்களோ வெளியில் தேமே என்று தொங்குவதாக தெரியவில்லை, அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை.
ஆனால் ராம்குமார் கரண்ட் கம்பியைப் பிடித்து கடித்து விட்டார், வயரைக் கடித்து விட்டார் என்று கூறுகிறார்கள். அதை அவர் எப்படிக் கடித்தார் என்பதையும் சிறை வார்டன் பேச்சிமுத்து என்பவர் உணர்ச்சிகரமாக நேற்று செய்தியாளர்களிடம் விளக்கவும் செய்தார். ஊரையே கூட்டி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்றுதான் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
சிறையில் கைதிகள் தற்கொலை என்பது ஆச்சரியமான விஷயம் அல்லதான். ஆனால் மரத்தில் தூக்குப் போடுவது, சிறை அறைக்குள் தூக்குப் போடுவது என மிக சாதாரண முறைகளுக்குத்தான் அதிக வாய்ப்புண்டு. ஆனால் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புழல் சிறையில் கரண்ட் கம்பியையும், வயரையும் எப்படி எடுத்து வாயில் கடித்து செத்துப் போகும் அளவுக்கு சர்வ சாதாரணமாக விட்டு வைத்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
இந்தியாவில் இதுவரை நடந்திராத மரணம் இது. அந்த வகையில் ராம்குமாரின் நூதன மரணம் வரலாறு படைத்து விட்டது!
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications