For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெறித்த பார்வையுடன்.. மனமெல்லாம் சோகமாக.. சிறையில் ராம்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: மனம் முழுக்க சோகம் மற்றும் பயத்துடன், அமைதியான முறையில் சிறையில் தனது அறையில் இருக்கிறாராம் ராம்குமார்.

சுவாதி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹாஸ்பிட்டல் செல் எனப்படும் பகுதியில் அடைத்துள்ளனர்.

Ramkumar spends his jail life silently

அவரது அறைக்கு 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரை சிறைக் காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் தற்கொலைக்கு மீண்டும் முயற்சித்து விடக் கூடாது என்பதற்காக கூடுதல் விழிப்புணர்வுடன் காவலர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர்.

யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறாராம் ராம்குமார். நிலைத்த பார்வையுடன், அமைதியாக, அதேசமயம் சோகமாக இருக்கிறாராம். தனது செயல் குறித்த வருத்தத்தில் அவர் இருக்கலாம் என்று சிறைக் காவலர்கள் கூறுகிறார்கள்.

அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், கழுத்தில் வலி என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். அவரை சிறையில் அடைத்தது முதல் இதுவரை யாரும் அவரை வந்து பார்க்கவில்லையாம்.

English summary
Swathy murder accused Ramkumar is spending his jail life silently. He is not taklking to anybody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X