வடிவேலு காமெடியை நிஜமாக்கிய மக்கள்... 48 கிணறுகளைக் காணவில்லை எனப் புகார்!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 48 கிணறுகளைக் காணவில்லை என அப்பகுதி மக்கள் வாலாஜா தாசில்தாரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜா தாசில்தார் மணிலாவிடம், ரத்தினம் என்பவரும் அப்பகுதி பொதுமக்களும் சேர்ந்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் வாலாஜா நகரசபை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மக்களின் குடிநீர் ஆதாரமாக வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பாலாற்று பகுதியில் சர்வே எண் 835 மற்றும் அந்த பகுதியில் உள்ள சர்வே எண்களில் அடங்கிய 48 குடிநீர் கிணறுகளில் இருந்து தினமும் குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாலாற்று பகுதி வன்னிவேடு கிராம சர்வே எண் 835 மற்றும் இந்த எண்ணை சார்ந்துள்ள சர்வே எண்களில் குடிநீர் கிணறுகள், காடுகள் ஏதும் இல்லை என மாவட்ட கலெக்டர் நந்தகோபால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு, குடிநீர் வடிகால் வாரிய மாவட்ட அதிகாரி நாராயணசாமி, வாலாஜா தாசில்தார் மற்றும் அதிகாரிகள், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதன் அடிப்படையில் அந்த இடங்களில் அரசு மணல் குவாரி அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக வன்னிவேடு கிராம பாலாற்று பகுதியிலிருந்து வாலாஜா மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் கிணறுகள் காணாமல் போய் உள்ளன. எனவே கிணறுகளை கண்டுபிடித்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுவின் நகல்கள் வாலாஜா நகரசபை தலைவர், நகரசபை ஆணையாளர், வாலாஜா போலீசார் ஆகியோருக்கும் தரப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications