வடிவேலு காமெடியை நிஜமாக்கிய மக்கள்... 48 கிணறுகளைக் காணவில்லை எனப் புகார்!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 48 கிணறுகளைக் காணவில்லை என அப்பகுதி மக்கள் வாலாஜா தாசில்தாரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜா தாசில்தார் மணிலாவிடம், ரத்தினம் என்பவரும் அப்பகுதி பொதுமக்களும் சேர்ந்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் வாலாஜா நகரசபை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மக்களின் குடிநீர் ஆதாரமாக வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பாலாற்று பகுதியில் சர்வே எண் 835 மற்றும் அந்த பகுதியில் உள்ள சர்வே எண்களில் அடங்கிய 48 குடிநீர் கிணறுகளில் இருந்து தினமும் குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாலாற்று பகுதி வன்னிவேடு கிராம சர்வே எண் 835 மற்றும் இந்த எண்ணை சார்ந்துள்ள சர்வே எண்களில் குடிநீர் கிணறுகள், காடுகள் ஏதும் இல்லை என மாவட்ட கலெக்டர் நந்தகோபால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு, குடிநீர் வடிகால் வாரிய மாவட்ட அதிகாரி நாராயணசாமி, வாலாஜா தாசில்தார் மற்றும் அதிகாரிகள், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதன் அடிப்படையில் அந்த இடங்களில் அரசு மணல் குவாரி அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக வன்னிவேடு கிராம பாலாற்று பகுதியிலிருந்து வாலாஜா மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் கிணறுகள் காணாமல் போய் உள்ளன. எனவே கிணறுகளை கண்டுபிடித்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுவின் நகல்கள் வாலாஜா நகரசபை தலைவர், நகரசபை ஆணையாளர், வாலாஜா போலீசார் ஆகியோருக்கும் தரப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications