கோவையில் 13 வயது சிறுமியை சீரழித்த 4 பெருசுகள்: நாளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் 13 வயது சிறுமியை 4 முதியவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனது உறவினரான கோபாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி மீது 62 வயது கோபாலகிருஷ்ணனின் காமப்பார்வை பட்டது.

Rape case against 4 oldmen: Judge to deliver verdict tomorrow

ஒரு நாள் சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கோபாலகிருஷ்ணன் தனது நண்பர்கள் பாலசுந்தரம்(75), ராகம் கருப்பசாமி(46), பாப்பம்பட்டி கருப்பசாமி(62) ஆகியோருடன் சேர்ந்து சிறுமிக்கு மயக்க ஊசி போட்டார். சிறுமி மயங்கியவுடன் அந்த 4 பேரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 முதியவர்களையும் கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மார்ச் மாதம் 18ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.

மார்ச் 18ம் தேதி 4 முதியவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் தீர்ப்பை மார்ச் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+