சட்டங்கள் மாறாத வரை பலாத்காரங்கள் தொடரும்: குஷ்பு
சென்னை: சட்டங்கள் மாறாத வரை பலாத்கார சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநில தலைவி சாய்லெட்சுமி தலைமையில் நடந்த விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

பெண்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சக்தி உள்ளது. பெண்ணாக பிறந்ததற்கு நாம் எல்லாம் பெருமைப்பட வேண்டும்.

சாதனை
பெண்களால் எதையும் சாதிக்க முடியும். நான் திரைத்துறையில் இருப்பதால் எனது சாதனைகள் பிறருக்கு தெரிந்துள்ளது. இந்த சமூகத்தில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

ஆணாதிக்கம்
நாட்டில் ஆணாதிக்கம் அதிகம் உள்ளது. பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவது இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பும் இல்லை.

பயம்
பெண்கள் சமுதாயத்திற்கு பயந்து வாழ்ந்து வருகிறார்கள். மனசாட்சிக்கு மட்டும் பயந்தால் போதும் என்று நான் கூறுகிறேன். கல்வி என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம். அனைத்து குழந்தைகளையும் படிக்க வையுங்கள். ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பாகுபாடு இன்றி வேலை செய்ய வையுங்கள்.

கட்டுப்பாடு
பெண்களுக்கு தனியாக வெளியே செல்ல பயமாக உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது, இப்படி தான் ஆடை அணிய வேண்டும், ஆண்களிடம் பேசக் கூடாது என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது. எப்படி நடக்க வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும். உங்களின் மனசாட்சிக்கு சரி என்று படுவதை செய்யுங்கள்.

பலாத்காரம்
நம் நாட்டில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். சட்டங்கள் மாறாத வரை பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது தொடரத் தான் செய்யும். இல்லத்தரசி என்று கூற வெட்கப்பட வேண்டாம். உலகை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் லட்சுமி, துர்க்கை இருக்கிறாள் என்றார் குஷ்பு.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications