For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை மயில் மீன்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் அரிய வகை மீனான மயில் மீன் சிக்கியது.

பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் இந்த அரியவகை மயில் மீன் சிக்கியது. அதை ரூ.1824க்கு வாங்கிய வியாபாரிகள் கேரளாவுக்கு அனுப்பினர்.

பாம்பனில் இருந்து இந்த மாதம் 15ஆம் தேதி டாஸ்டன் என்பவரது நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 5 நாட்கள் கடலில் தங்கி, மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர்.

இவர்களது வலையில் 32 கிலோ எடையில் அரியவகை மயில் மீன் சிக்கியது. இதை வாங்க வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. ஒரு கிலோ ரூ.57 வீதம், 1824 ரூபாய்க்கு வியாபாரிகள் இந்த மீனை வாங்கினர்.

இதைப்பற்றி மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், "அதிக ருசி கொண்ட இம்மீன், சிக்குவது மிகவும் அரிது.அதனால் தான் இவ்வளவு விலை" என்றார்.

English summary
Rameshwaram fisher men's net a rare peacock fish get entangled yesterday. The sellers says it is very rare to find out and this fish is very tastiest one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X