மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை மயில் மீன்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் அரிய வகை மீனான மயில் மீன் சிக்கியது.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் இந்த அரியவகை மயில் மீன் சிக்கியது. அதை ரூ.1824க்கு வாங்கிய வியாபாரிகள் கேரளாவுக்கு அனுப்பினர்.
பாம்பனில் இருந்து இந்த மாதம் 15ஆம் தேதி டாஸ்டன் என்பவரது நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 5 நாட்கள் கடலில் தங்கி, மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர்.
இவர்களது வலையில் 32 கிலோ எடையில் அரியவகை மயில் மீன் சிக்கியது. இதை வாங்க வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. ஒரு கிலோ ரூ.57 வீதம், 1824 ரூபாய்க்கு வியாபாரிகள் இந்த மீனை வாங்கினர்.
இதைப்பற்றி மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், "அதிக ருசி கொண்ட இம்மீன், சிக்குவது மிகவும் அரிது.அதனால் தான் இவ்வளவு விலை" என்றார்.












Click it and Unblock the Notifications