சென்னையில் மீண்டும் கனமழை: செல்போன் சேவை பாதிப்பு - அச்சத்தில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 40 மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் தலைநகரமே வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. தரையை காணமுடியவில்லை எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான். செல்போன் சேவை, தொலைபேசி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

காலையில் சிலமணிநேரங்கள் மழை நின்றது. இதோடு மழை நின்றுவிடும் என்று சந்தோசப்பட்ட சென்னைவாசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை

அம்பத்தூர் தொழிற்பேட்டை

விடாமல் கொட்டிய மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 2000 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

வளசரவாக்கம் மூழ்கியது

வளசரவாக்கம் மூழ்கியது

வளசரவாக்கத்தில் ராதாநகர், லட்சுமிநகர், அன்பு நகர், வேலன் நகர் பகுதிகளில் மழை நீர் மூன்றடிக்கும் மேல் தேங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 20 தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசிய நிலையில் மீண்டும் கழுத்தளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

ராணுவக்குழுக்கள்

ராணுவக்குழுக்கள்

கனமழையால் தத்தளிக்கும் சென்னை புறநகரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மேலும் 4 ராணுவ குழுக்கள் வரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடரும் கனமழை

தொடரும் கனமழை

தமிழகத்தில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவின் கடலோர பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழை

கொட்டும் மழை

திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை 40 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை சில மணிநேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்தது. இதனால் மக்கள் அதிர்ச்சிடைந்திருந்த நிலையில் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+