உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மேனேஜர் மீது தாக்குதல்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்
சென்னை: ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலக மேலாளர் சரவணமுத்து தாக்கப்பட்டது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் புகார் அளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸின் மேலாளராக இருப்பவர் சரவணமுத்து. கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலகம் முன்பு அவர் இன்று தாக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர் இரண்டு முறை தாக்கப்பட்டுள்ளார். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சரவணமுத்து தாக்கப்பட்டது குறித்து ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் மற்றும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் இருந்த கூடுதல் கமிஷனர் சேஷசாயிடம் நடந்தது குறித்து விளக்கமாக தெரிவித்து புகார் மனுவை அளித்துள்ளனர். இம்முறையாவது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் ஆணையர் வாக்குறுதி அளித்ததாக செல்வம் மற்றும் பரந்தாமன் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications