For Daily Alerts
Just In
வெள்ளத்தால் ரத்தான ரயில்களின் முன்பதிவு கட்டணம் வாபஸ் பெற காலக்கெடு நீடிப்பு
சென்னை: ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்பப் பெற கால அவகாசத்தை நீட்டியுள்ளது ரயில்வே.
மழையை தொடர்ந்து சென்னை மார்க்கத்தில் பல ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. அந்த ரயில்களில் முன்பதிவு செய்தோருக்கு முழு கட்டணமும் திருப்பியளிக்கப்படுகிறது.
டிசம்பர் 4ம் தேதி ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை இன்றும், டிசம்பர் 5ம் தேதி ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை நாளை வரையும், டிசம்பர் 6ம் தேதி ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை டிசம்பர் 11 தேதி வரையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments
English summary
Due to torrential rain and flooding in Chennai city since 1st December 2015, Southern Railway has decided to cancel all the trains originating / arriving and passing through Chennai, until 5th December 2015. Grant of full refund of fare, after deducting only the clerkage charge, to all the passengers on submission of the TDR.
Story first published: Wednesday, December 9, 2015, 12:08 [IST]