சென்னையில் உள்ள என் பெற்றோரை பார்த்தீங்களா, நண்பனை பார்த்தீங்களா?: ட்விட்டரில் மக்கள் கதறல்
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தங்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாதவர்கள் ட்விட்டரில் அவர்களின் விபரங்களை வெளியிட்டு யாராவது உதவுங்களேன் என்று கேட்டு வருகிறார்கள்.
வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளக்காடாகியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் மேலும் பெய்யும் மழையை தாங்கக் கூடிய நிலையில் இல்லை.
வெள்ளத்தால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம்
செல்போனை சார்ஜ் போட மின்சாரம் இல்லாததால் மக்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இந்நிலையில் அவர்களின் நிலைமையை பற்றி தெரியாமல் வெளியூரில் வசிக்கும் சொந்தங்கள் கவலையில் உள்ளனர்.

ட்விட்டர்
சென்னையில் சிக்கியுள்ள தங்களின் உறவினர்களை எந்த வழியிலும் தொடர்பு கொள்ள முடியாததால் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மக்கள் ட்விட்டரில் அவர்களின் விபரங்களை வெளியிட்டு அருகில் உள்ள யாராவது உதவி செய்யுங்களேன் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
|
அசோக் நகர்
#chennaifloods #ChennaiRainsHelp #ashoknagar பிளாட் 8, 52, ராகவா காலனி, முதல் லிங்க் தெரு, அசோக்நகர் முதல் தளம் பெற்றோரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று கார்த்திக் அமிர்தராஜன் ட்வீட் செய்துள்ளார்.
|
பெற்றோர்
@editorsuresh என் நண்பரின் பெற்றோர் 6வது தெரு, குமரன் காலனி, வடபழனியில் உள்ளனர். நேற்று காலையில் இருந்து அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏதாவது தெரியுமா? என்று ஷங்கர் என்பவர் கேட்டுள்ளார். நானும் அங்கு தான் உள்ளேன். செல்போன் எண்ணை அளிக்கவும். தேவையானவற்றை செய்கிறேன் என்று சுரேஷ் உறுதி அளித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications