தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஜூன் 4ல் விசாரணையை தொடங்குகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக வரும் திங்கள் கிழமை விசாரணையை தொடங்குகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக வரும் திங்கள் கிழமை விசாரணையை தொடங்குகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த வாரம் செவ்வாய் கிழமை நடந்த போராட்டதின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் மோசமாக காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கலவரம் நடந்தது குறித்து விசாரிக்க உத்தரவிட்டு இருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் வரும் திங்கள் கிழமை விசாரணையை தொடங்குகிறார் அருணா ஜெகதீசன். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை ஆய்வு நடத்த உள்ளார்.
முதலில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அருணா ஆட்சியருடன் கலந்துரையாடல் நிகழ்த்துவார். அதன்பின் சிசிடிவி பதிவுகளை சோதனையிடுவார். அதன்பின் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications